மலேசியாவில் ஏழு படை வீடு பத்து மலை முருகன்

7 Padai Veedu Batu Caves Murugan

மலேசியாவில் ஏழு படை வீடு பத்து மலை முருகன்
மலேசியாவில் ஏழு படை வீடு பத்து மலை முருகன்

Date ; 25 May 2025 Time ; 9.00 Am News By; Ganapathy Krishnasamy 

மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் (இந்துக்கள்) மட்டுமின்றிச் சீனர்களும் வந்து வழிபடக்கூடிய கோயில்களில் ஒன்று பத்துமலைக் குகை முருகன் கோயில். இந்தக் கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை அடுத்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இங்குள்ள முருகப் பெருமான் சுப்பிரமணிய சுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

            இந்தப் பத்துமலைக் குகை முருகன்கோயிலில்இந்துக்கள் தவிரச் சீனர்களும் தங்கள் குறை தீர வேண்டிக் கொள்வதுடன், இந்துக்களைப்போல் அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற வேண்டுதலுடன் அந்த நேர்த்திக் கடனையும் செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்து மதத்திற்குரிய கோயிலாக இருந்தாலும், மதபாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவானதாப் போய் விட்ட இந்தப்பத்துமலைக் குகை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிலா வருடந்தோறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. குகையில் வேல் மாதிரி உருவம் கற்பாறையில் தெரிவதைக் கண்ட ஒரு தமிழ் பக்தர் ஒரு மூங்கிலை நிறுவி அதை வேலாகக் கருதி வழிபட்டு வந்தார். பிறகு உலோகத்திலான வேல் நிறுவப்பட்டு முருகப் பெருமானுக்கு ஆலயம் அமைக்கப்பட்டது என்கிறார்கள். தமிழகத்தில் நாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள திருமலைராயன் பட்டினத்தைச் சேர்ந்த காயோராகணம் பிள்ளை மலேசியாவில் குடியேறி நிறையச் சம்பாதித்திருக்கிறார்

.

            இவர் தான் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை இறைபணிகளுக்காகவும் செலவழித்தார். கோலாலம்பூரில் மாரியம்மன் கோயில், கோர்ட்டு மலைக்குப் பக்கக்தில்  விநாணகர் ஆலயம் போன்றவைகளைக் கட்டுவித்த இவர் 1890-01 ஆணடுகளில்  பத்துமலைக் குபை முருகப் பெருமானுக்கும் ஆலயத்தைக் கட்டியிருக்கிறார்.  இந்த  மூன்று ஆலயங்களிலும் அனைத்து விழா நாட்களிலும் காயோராகணம் பிள்ளை குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே முதல்மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது என்கிறார்கள்.

            இந்தப் பத்துமலையில் இரு குகைகள் உள்ளன. ஒன்று மிக ஆழமாகச் செல்வது, மிகவும் இருண்டது. மற்றொரு குகையில்தான் முருகன் கயில் கொண்டிருக்கிறார். நக்கீரர் வரலாற்றில் ஒரு பூதம் அவரை ஒரு குகைக்குள் அடைத்து விட்டதாகவும் அங்கு ஏற்கனவே 999 பேர் அடைக்கப்பட்டு இருந்ததாகவும் நக்கீரையும் சேர்த்து இவர்கள் எண்ணிக்கை ஆயிரமாகிவிட்டதாகவும் நபர்களின் எண்ணிக்கை ஆயிரமான பின்பு இவர்களைத் தின்னப் பூதம் திட்டமிட்டிருந்தது என்கிற வரலாறு அனைவரும் அறிந்ததே

.

            ஆயிரம் பேர் அடைத்து வைக்கக்கூடிய அளவிலான குகைகளை உடைய முருகனின் மலைக் கோயில்கள் தமிழ்நாட்டில் எதுவுமில்லை. பூதங்கள் கடல் கடந்து செல்லக்கூடிய ஆற்றலுடையவை என்பதைல் நக்கீரர் அடைபட்டுக் கிடந்தது இந்த மலேசியப் பத்துமலைக் குகையாகத்தான் இருக்கும். எனவேதான் இங்கு முருகனின் வேல் தமிழ்ப் பக்தர் ஒருவருக்குத் தென்பட்டது. அதன் பிறகுதான்இங்கு முருதன் கோயில் அமைக்கப்பட்டது என்றும் இங்குள்ள ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.

          இந்த முக்கியமான பத்துமலைக் குகை முருகன் கோயில் 1891ஆம் ஆண்டில்அமைக்கப்பட்டிருக்கிறது. அப்போது இந்த முருகனைதரிசிக்கக் கரடுமுரடான பாதையில் செல்ல வேண்டியிருந்தது. அதன் பின்பு 1938ஆம் ஆண்டில் இந்த மலைக் கோயிலுக்குச் செல்ல 272 படிக்கட்டுகளைக் கொணஞ்டமூன்று நடைபாதைகள் அமைக்கப்பட்டன. இது தவிர தனியே இரயில் பாதை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழிகளைப் பயன்படுத்தித் தலையிலிருந்து 400 அடி  உயரத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று சுப்பிரமணிய சுவாமியான முருகப் பெருமானைத் தரிசித்து வரலாம்

.

            தற்போது இந்தக் கோவிலுக்குச் செல்லும் பாதைகளுக்கு முன்பாக, அதாவது நுழைவு வாயிலின் ஒருகில் தங்கப் போல், தகதகவென மின்னும்படியாக வர்ணம் பூசப்பட்ட மிகப் பெரிய முருகன் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய வேலை வலது கையில் தாங்கி நிற்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ள இந்தச்சிலையின் உயரம் 42.7 மீட்டர், அதாவது 140.09 அடி. இந்தச் சிலை அமைக்க2003ஆம் ஆண்டில் துவங்கப்பட்டபணி 2006ஆம் ஆண்டில்தான் நிறைவு பெற்றது.

           இந்தச் சிலை அமைக்க 2006ஆம் ஆண்டில் இந்திய மதிப்பில் 2 கோடியே40 லட்சம் ரூபாய் செலவாகிஇருக்கிறது. இந்தச்சிலை அமைப்பிற்கான கட்டுமானப்பொருந்கள் அதிகமாகப் பக்கத்து நாடான தாய்லாந்தில்  இருந்து கொண்டு வரப்பட்டிருக்கிறது. உலகின் மிகப் பெரியமுருகன்சிலையாக அமைக்கப்பட்ட பின்பு இந்தப் பத்துமலைக் குகைமுருகன் கோயிலுக்கு வருபவர்கள் எண்ணிக்கையுடன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

 

            முருகனுக்கு உகந்ததாகக் கருதப்படும் நாட்களில் சிறப்புப் பூஜைகந் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இங்கு வருடந்தோறும் தை மாதம்வரும் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் தைப்பூச விழாவில்இந்துக்கள் தவிரசீனர்கள் மற்றும் வேறு சிலரும் இங்குள்ள புனித  ஆற்றில் நீராடி விட்டு, தமிழ்நாட்டில் முருகன்  கோயில்களில் நேர்த்திக் கடன்களாகச் செய்யப்படுமக் அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற பலவிதமானத நேர்த்திக் கடன்கள் இங்கும் இருக்கிறது.

            ஆனால் இங்கு தமிழர்களைத் தவிர சீனர்கள் மற்றும் பிற மதத்தைச் சார்த்தவர்களும் முருகனுக்கு வேண்டிக் கொள்வதும் நேர்த்திக்கடன் செலுத்துவதும் ஆச்சரியமான ஒன்றாகும். மலாய்க்காரர்கள் எனப்படும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வழிபடுவதில்லை. என்றாலும்இக்கோவிலையும்இங்குள்ள மிகப்பெரிய முருகன் சிழையையும் சுற்றுலாவாகவந்து பார்த்து வியந்து செல்கின்றனர்.

            சுப்பிரமணிய சுவாமிக்கு மிக உகந்த கார்த்திகை, கந்தசஷ்டி போன்ற விழாக்களை விட பத்துமலை தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. தமிழகத்தில் பழனிமழை போல மலேசியாவில் பத்துமலையில் இந்த விழா சிறப்பாககொண்டாடப்படுகிறது. விரதமிருந்து மஞ்சள் ஆடை அணிந்து, பால் குடங்களை ஏந்தியும், காவடிகள் தூக்கியும், நாக்கில் வேல் குத்திக் கொண்டும், கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாகவும் மலை ஏறி வழிபடுகிறார்கள்.

            மலேசியத் தமிழர்கள் மட்டுமல்லாது, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா நாடுகளிலிருந்து தமிழகத்திலிருந்தும் மக்கள் கூட்டம் அலைமோதும். மலாய், சீன மக்களும் பிராத்தித்துக் கொண்டு தைப்பூச விழாவில் பங்குபெறுவது பரவசமான காட்சியாகும். கோலாலம்பூர் தலைநகரிலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்தில் உள்ளது இந்த ஆலயம்.

            குன்றிருக்கும் இடமெங்கும் குமரன் இருப்பான் என்பதனை விடத்தமிழர் இருக்கும் இடமெல்லாம் தமிழ்க்கடவுளான முருகன் காட்சி தந்து அருள்புரிகிறான் என்பதுதான் உண்மை.

www.myvelicham.com / Face book / You Tube / Tik Tok