Tamil: புக்கிட் ஜெம்போவில் சந்தேகநபர் சுட்டுக் கொலை – போலீசாருடன் துப்பாக்கி சண்டை

During an anti-crime operation in Bukit Jambul, Penang, a 35-year-old suspect exited a BMW and opened fire on police officers.

Tamil: புக்கிட் ஜெம்போவில் சந்தேகநபர் சுட்டுக் கொலை – போலீசாருடன் துப்பாக்கி சண்டை

Dated: 17.5.2025    Time: 11.30      By: Punithai Chandran                                                                                                                                                                                                                                                 

பினாங்கு, பாயான் லெப்பாஸ்,                           பினாங்கில் சந்தேக நபர் போலீசுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் உயிரிழப்பு

காவல் துறையினர் குற்றத் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தபோது, புக்கிட் ஜெம்போவில் சந்தேகத்துக்குரிய நபர் ஒருவர், BMW காரிலிருந்து வெளியே வந்து  போ​லீசாரை பலமுறை சுடப்பட்ட பொழுது, பாதுகாப்பு காரணம் கருதி போலீசாரும் அவரை எதிர்த்துச் சுட்டதால், 35 வயதுடைய அந்நபர் சம்பவ இடத்திலேயே அவர் மரணடைந்தார் என்று பினாங்கு தலைமை போலீஸ் அதிகாரி டத்தோ ஹம்சா அஹ்மாட் தெரிவித்தார்.

அவரிடம் இருந்து FNP-45 துப்பாக்கி, 3 குண்டுகள், இரும்பு கம்பி, ஒரு பாராங் கத்தி, 1 ரோத்தான், 2.5 கிராம் கொண்ட போதைப் பொருள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. இவர் ஏற்கனவே 19 குற்றங்கள் மற்றும் 15 போதைப் பொருள் குற்றங்களை புரிந்துள்ளவர் என்றும், இதனைத் தொடர்ந்து மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.