YB,  ரமணன் முழு அமைச்சரானால் நாட்டுக்கும் என்ன செய்யலாம்.

YB,  ரமணன் முழு அமைச்சரானால் நாட்டுக்கும் என்ன செய்யலாம்.

Date : 01 June 2025 News  By: Ponrangan Time: 2.10pm

 

குறிப்பாக தம் இன தமிழர் இந்தியர்களுக்கு என்ன செய்ய வேண்டும்?  

400 க்கும் மேற்பட்ட பகுதி உதவி தமிழ்ப்பள்ளிகளை முழு உதவி பள்ளிகளாக்க வேண்டும்.

 நாட்டில் உள்ள எல்லா இந்திய பட்டதாரிகளுக்கும்  அரசு, அல்லது ஜி எல் சி, அல்லது பெரிய நிறுவனங்களில் வேளை வாய்ப்புகளுக்கு  Malaysia Indian Employment Empowerment Recruitment Agency  திறக்கலாம். 

இடை நிலைப்பள்ளிகளில் பி எல் ஓ தமிழ் வகுப்புகள் பள்ளி நேரத்தில் நடத்த அரசிடம் கேட்க வேண்டும். இதில் சமயக்கல்விக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.

 இடையில் கல்வி கற்காமல் போன இளைஞர்களுக்கு விவசாயம் டிவெட் வழி தொழில் கல்விகள்  போதிக்க நிதியுதவி வேண்டும். அத்தோடு வெறிச்சோடி கிடக்கும் தோட்டத்துறை மக்களுக்கும் இளைஞர்களுக்கும் சப்சிடி ஊக்குவிப்பு பணம் கொடுத்து தோட்டத்துறை வீட்டுமனை மேம்பாட்டுக்கு உதவ வேண்டும்.

இதனால் நாட்டிற்கு அதிக வருமானம் மற்றும் பண பலவீனத்தை தோட்டத்துறை விவசாயத்துறை ஈடுக்கட்ட முடியும்.

 தமிழ்ப்பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளுக்கான அரசு நிதி உதவி தேசியப்பள்ளிகளுக்கு கொடுக்கும் அதே நிகர் அளவு கொடுக்க மடானி அரசும் ஒற்றுமை அரசும் அரசு கல்வி கொள்கையாக மாற்றி அமைக்க வேண்டும்.

நாட்டில் மலாய்க்காரர்களுக்கு  சுமார் 2000 அரசு ஜி எல் சி நிறுவனங்கள் உண்டு.மலேசிய இந்தியர்களுக்கு ஒரு ஜி எல் சி நிறுவனத்தையாவது வை பி ரமணன் காலத்தில் அமைத்துத்தர மடானி பிரதமரிடம் மனு கொடுக்க வேண்டும்.

 அத்தோடு நிதி அமைச்சில் இந்தியர்களுக்கான ஒரு நிதி இலாகா அமைத்தல் காலத்தின் கட்டாயம், இதன் வழி  மாநிலங்களின்  நிதி மானியங்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். 

இது வரை கோப்ராசி வை பி வழி அமைச்சில் சுமார் 500 மில்லியன் கடன் உதவி திட்டங்கள் soft loan scheme திட்டமாக மாற்றி வட்டிகளை குறைக்க ஒருமுகப்படுத்த வேண்டும். 

மிட்டி அமைச்சுவழி இந்தியர்கள் சிறப்பு பயிற்சி வழி துணை துறை சார்ந்த சான்றிதழ்கள் அல்லது licences கள் வழங்கி பல தரப்பட்ட தொழில் துறைகள் மேம்பட முற்பட வேண்டும்.

 முழு அமைச்சர் தகுதியில் "இந்தியர்களுக்கு  பொருளாதார நடவடிக்கை மேம்பாட்டு ஆலோசனை மன்றம்" அமைக்க வேண்டுகிறோம்.

முக்கியமாக நாட்டின் ஊடகத்துறைகள் வெறும் பாடல்களை போட்டு ஏமாற்றாமல் கல்வி, பொருளாதார, தொழில் நுட்ப ஆய்வு செய்திகள் 50% இடம் பெற அரசு தனியார் ஊடகத்துறையில் வல்லுணர்கள் இடம் பெற கட்டாய மாக்க வேண்டும்.

 மாதம் ஒரு  முறை மக்களுடன் அமைச்சுகளின் பொருளாதார சந்திப்பு Forums நடத்தி நாட்டு உலக பொருளாதார நகர்வுகள் அதில் பங்குபெறும் ஆர்வங்களை ஊக்குவிக்க ஆவனம் செய்ய அமைச்சு முட்பட வேண்டும்.

 பட்டணப்புறங்களில் வேலை இல்லாமல் சுற்றித்திரியும் இளைஞர்கள் யுவதிகள் 11 மணிக்கு மேல் பப்புகளில் ஆட்டம் போடுவதை நிறுத்த ஆக்கப்பூர்வ சட்டம் வேண்டும். மக்கள் தொகை பெருக்கும் வேண்டும்

.

 சமுதாயம் வறுமையில் பணத்தை நம்பி இருக்கு உங்கள் காலத்தில் ஒரு யுனிட் தரக்ஷ்ட் ஆரம்பித்தால் பல முதலீட்டு வருவாய் திட்டங்கள் வழி சமூதாயத்தின் பொருளாதார இகுவிட்டி சொத்துடமை வழி மதிக்கத்தக்க இனமாக வாழ நாட்டின் பி என் பி PNB போல சிந்தியுங்கள். அல்லது PNB யை பயன் படுத்துங்கள். நன்றி,வணக்கம். வாழ்த்துகள்.

www.myvelicham.com/  tik tok / you tube / face book