ஈரான், ஈராக் மற்றும் ஜோர்டான் நாடுகளில் அதிகரித்து வரும் பதட்டங்களினால், மலேசியா பயண ஆலோசனையை வெளியிட்டது
Malaysia's Foreign Ministry (Wisma Putra) has advised its citizens to avoid non-essential travel to Iran, Iraq, and Jordan due to rising tensions between Iran and Israel

Dated: 14.6.2025 Time: 12.00 pm By: Punithai Chandran
ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, ஈரான், ஈராக் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கான பயணங்களைத் தவிர்க்குமாறு மலேசியர்களுக்கு விஸ்மா புத்ரா பயண ஆலோசனையை வழங்கியுள்ளது.
அந்த மூன்று நாடுகளிலும் வான்வெளிகள் மூடுவதாக உள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், ஈரானில் உள்ள மலேசியர்கள் விழிப்புடன் இருக்குமாறும், நிகழ்வுகளை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும், டெஹ்ரானில் உள்ள மலேசிய தூதரகத்தில், தங்களது தொடர்பு விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ளுமாறும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
எனவே, இப்பகுதிகளில் உள்ள மலேசியர்கள் விமான அட்டவணைகளில் தங்களது பயணத் திட்டங்களுக்குத் தேவையான மாற்றங்களைச் செய்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உதவி தேவைப்படுபவர்கள் பின்வரும் வகையில் தூதரகங்களைத் தொடர்புக் கொள்ளலாம்:
தெஹ்ரான், ஈரான், மலேசிய தூதரகத்தை +98 21 8807 2444 / +98 21 8807 8606 / +98 933 535 2602 என்ற எண்களிலோ, அல்லது மின்னஞ்சல் மூலம்; mwtehran@kln.gov.my / mwconsular.teh@gmail.com என்ற முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.
ஈராக், பாக்தாத்தில் உள்ள மலேசிய தூதரகத்தை +964 787 859 8775 / +964 786 497 0087 என்ற எண்களிலோ, அல்லது மின்னஞ்சல் மூலம்; mwbaghdad@kln.gov.my என்ற முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.
ஜோர்டான், அம்மான், மலேசிய தூதரகத்தை +962 6590 2400 / +962 78590 2400 என்ற எண்களிலோ, அல்லது மின்னஞ்சல் மூலம்; mwamman@kln.gov.my
ஆகிய முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி. எஃப்எம்டி