நெடுஞ்சாலை நிதி முறைகேடு விசாரணையில் RM16 மில்லியன் மதிப்புள்ள ஆடம்பரப் பொருட்களை MACC பறிமுதல் செய்தது
The Malaysian Anti-Corruption Commission (MACC) has seized an additional RM16 million worth of luxury goods, including bags, watches, gold, and jewelry, from a 'Tan Sri' concession holder in connection with the alleged misuse of sukuk funds

Dated: 14.6.2025 Time: 12.40 pm By: Punithai Chandran
கோலாலம்பூர்,
கிள்ளான் பள்ளத்தாக்கில் ஒரு நெடுஞ்சாலை அமைப்பதற்காக SUKUK நிதியை தவறாகப் பயன்படுத்தியதன் தொடர்பில், ஒரு டான்ஸ்ரீ-க்கு சொந்தமானதாகக் கருதப்படும், மேலும் RM16 மில்லியன் மதிப்புள்ள ஆடம்பரப் பொருட்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) அண்மையில் கைப்பற்றியுள்ளது.
டான்ஸ்ரீயின் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்களில், 3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 84 ஆடம்பரப் பைகள், 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 11 ஆடம்பர கைக்கடிகாரங்கள், 3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தங்கக் கட்டிகள், நாணயங்கள் மற்றும் சிலைகள், 4 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வைரங்கள் மற்றும் நகைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக MACC தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசம் பாக்கி அறிவித்துள்ளார்.
சுமார் 150,000 ரிங்கிட் மதிப்புள்ள ஆடம்பர சூதாட்ட உபகரணங்கள் கொண்ட ஒரு செட்டும் கைப்பற்றப்பட்டதுடன், விலையுயர்ந்த பொருட்களை சேமித்து வைக்கும் ஒரு பெட்டகமும், ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் மற்றும் வைக்கப்பட்டிருந்த ஒரு ரகசிய பெட்டகமும் கண்டுபிடிக்கப்பட்டன என்று ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் அந்த ஆயுதங்கள் அந்த நபர் வைத்திருக்கும் பாதுகாப்பு நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததால் அவை கைப்பற்றப்படவில்லை என்றும் MACC ஓர் அறிக்கையில் அறிவித்துள்ளது.
உடல்நலக் காரணங்களால் அந்த நபரின் வாக்குமூலம் பின்னர் ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
MACC இந்த வழக்கின் தொடர்பில், ஏற்கனவே மொத்தம் RM143 மில்லியன் மதிப்புள்ள பொருட்களை கைப்பற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி. பெர்னாமா