அன்வாரின் அடுத்த தேர்தலுக்கான அவசியமான பதில் - அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள்
Anti-corruption lawyer Edmund Terence Gomez emphasizes that Prime Minister Anwar Ibrahim must address questions regarding reforms if he wishes to retain power in the next term.

Dated: 13.6.2025 Time: 11.10 am By: Punithai Chandran
கோலாலம்பூர்,
பிரதமர் அன்வார் இப்ராஹிம் அடுத்த தவணைக்கு ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால், சீர்திருத்தங்கள் சம்பந்தமாக எழும் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டும் என்று ஊழல் எதிர்ப்பு வழக்கறிஞர் எட்மண்ட் டெரன்ஸ் கோமஸ் தெரிவித்துள்ளார்.
இங்கு நடைபெற்ற ஒரு பொது மன்றத்தில் பேசிய அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 16-ஆவது பொதுத் தேர்தல் (GE16) வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பிரதமர் இதற்கு அதிமுக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்றார்.
சிவில் சமூகம் 'உண்டி18' (Undi18) மற்றும் (Anti-Party Hopping Law) “கட்சி தாவல் தடை சட்டம்” போன்ற முக்கிய சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தமைக்கு பிரதமரை பாராட்டிய அவர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஒரு முக்கியமான சக்தியாக விளங்குகின்றன என்றார்.
எனவே, முக்கிய சீர்திருத்தங்களை அமல்படுத்த அரசாங்கத்திற்கு தொடர்ந்து கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட, பொதுமக்கள் உட்பளட அழுத்தம் கொடுக்க வேண்டும். அழுத்தம் கொடுக்காமல், அர்த்தமுள்ள எந்தவொரு மாற்றத்தையும் எதிர்பார்க்கக் கூடாது. இப்பொழுது நாம் அதிகாரத்தில் இருப்பவர்களைப் பாதுகாக்கும் ஒரு முக்கிய இடத்தில் இருப்பதாக அவர் கூறினார்.
இதற்கு முன்னதாக பிரதமர், அர்த்தமுள்ள மாற்றத்திற்கு நேரம் எடுக்கும் மற்றும் பரந்த அரசியல் ஆதரவு தேவை என்றும், கூட்டணி அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளுக்குள், தன்னால் முடிந்ததைச் செய்வதாகவும், தேசிய திட்டங்களை செயல்படுத்துவதில் சரவாக் கூட்டணி கட்சி (GPS) மற்றும் சபா மக்கள் கூட்டணி (GRS) போன்ற பங்காளிகளின் ஆதரவு முக்கியமானது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி. எஃப்எம்டி.