ரஃபிஸி, நிக் நஸ்மி மீண்டும் அமைச்சரவையில்: PKR ஒற்றுமைக்கு அன்வார் அழைப்பு
Prime Minister Anwar Ibrahim has expressed his desire to reinstate former ministers Rafizi Ramli and Nik Nazmi Nik Ahmad into the cabinet.

Dated: 13.6.2025 Time: 11.30 am By: Punithai Chandran
முன்னாள் அமைச்சர்களான ரஃபிஸி ரம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அஹ்மத் ஆகியோரை அமைச்சரவையில் மீண்டும் சேர்க்க விரும்புவதாக அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த கட்சித் தேர்தல்களைத் தொடர்ந்து, PKR தொண்டர்கள் கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கட்சித் தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து, ரஃபிஸி மற்றும் நிக் நஸ்மி இருவரும் அமைச்சர் பதவிகளில் இருந்து விலகினர். இருப்பினும், அன்வார் அவர்களின் ராஜினாமாக்களை ஏற்காமல், முடிவுகளை மறுபரிசீலனை செய்ய அவர்களுக்கு விடுப்பு வழங்கியுள்ளார். ரஃபிஸி ஜூன் 16 வரையிலும், நிக் நஸ்மி ஜூலை 3 வரையிலும் விடுப்பில் உள்ளனர்.
கட்சித் தேர்தல்களைத் தொடர்ந்து ஏற்பட்ட உள் மோதல்களைத் தீர்த்து, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று அன்வார் PKR உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தார். பெரிய நோக்கங்களுக்காக நிறைவேற்ற வேண்டுமென்றால் அதற்கு ஒற்றுமையாகவும், பக்குவத்துடனும் இருக்க வேண்டுமென்று வலியுறுத்தினார். தன்னால் UMNO உடன் இணைந்து பணியாற்ற முடியும் என்றால், நிச்சயமாக நமது கட்சியின் கருத்து வேறுபாடுகளைக் கடந்து வரவும் முடியும் என்று அன்வார் குறிப்பிட்டார்.
நன்றி. மலேசியக் கினி