தானைத் தலைவர்களுக்கு சிலைகள் காலத்தின் கட்டாயம்.
The leaders of the organization

09 June 2025 Time : 12 40am News By: PonRangan
நாட்டின் புகழ் மிக்க பெரியவர் துன். சாமிவேலு அவர்கள் மலேசியாவில் தமிழர்களுக்கு,நாட்டுக்கும் ஒரு சாகாப்த்தமிக்க அரசியல்,அரசு வரலாற்று தமிழினத் தலைவர்.
சுமார் 3.0 மில்லியன் மலேசிய இந்தியர்களில் ஒருவர் கூட அவர் நினைவாக ஒரு கல்லறை அமைக்க ஒர் ஆறடி என்பது 10x10 நினைவிடம் ஒதுக்காமல் அரசும் நம்மை ஏமாற்றிவிட்டது.
இனமும் தானைத்தலவருக்கு ஒரு கல்லறை நினைவிடம் கட்ட மறந்து விட்டது.
அடுத்து நம் சுதந்திர மகன் துன் சம்பந்தனாருக்கும் அதே நிலைதான் போலும்.தேசிய நில நிதியும் கண்டுக்கொள்ள வில்லை.
அடுத்து நாட்டுக்கு மின் சக்தி அறிமுகப்படுத்திய பெரியவர் பத்துமலையை 1889ல் கண்டுபிடித்த நல்லத்தமிழின தலைவர் ஐயா தம்புசாமியின் பிள்ளைக்கும் அதே கதிதான்.அப்போது அமைத்த பத்து மலை சிலையும் தலையோடு ஓர் ஓரத்தில் உள்ளது.
ஐயா தம்புசாமி பிள்ளையை தேசிய எரிசக்தி நிறுவனமான TNB யும் கண்டுக்கொள்ள வில்லை!? நாட்டிற்கு ஒளி தந்து ஒலி ஏற்றிய அவருக்கு ஒரு சிலை கட்ட வக்கில்லாமல் போனது வரலாற்றுப்பிழையாகும்.
நாட்டின் வரலாற்று நாயகர்களான ஐயா தம்புசாமிக்கு பத்துமலையில் ஒரு முழு உருவ கண்ணாடி அறைக்குள் சிலையும், துன் சம்பந்தனாருக்கு தேசிய நில நிதி கட்டட முகப்புக்குள் ஒரு சிலையும், துன் சாமிவேலு அவர்களுக்கு புதிதாக அமையவுள்ள மஇ கா புதிய கட்டடத்துக்குள் துன் மாணிக்கவாசகம் துன் சாமிவேலு இருவரின் சிலைகள் அமையப்பெறுவது காலத்தின் கட்டாயமாகும்.
ஒரு கோரிக்கை மனு.
இத்தகு முனைப்புகளை தற்போதைய மஇ காவின் துணைத்தலைவர் டத்தோ சிறி சரவணன் அவர்கள் மட்டும்தான் முன்னெடுக்க முடியும் என்பது நமது கோரிக்கையாகும்.
நன்றி,வணக்கம். பொன் ரங்கன். தலைவர். மலேசிய நாம் தமிழர் இயக்கம். 5/6/2025 கோலாலம்பூர்.