கட்சியின்ஒற்றுமைக்காக அனைவரும் ஒன்று திரண்டு வாருங்கள்
Sentosa Assemblyman Gunaraj George, also the National Central Member for Kota Raja, has stated that the party is at a crucial juncture. Amidst various challenges, he emphasizes the importance of party unity, supporting the leadership

கட்சியின் போராட்டத்தில் நாம் ஒரு முக்கியமான காலக்கட்டத்தில் இருப்பதாக, செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும், கோத்தா ராஜாவின், தேசிய மத்திய உறுப்பினருமான குணராஜ் ஜார்ஜ் தாம் விடுத்துளள் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
அவர் கூறியதாகவது, தற்போது, பல்வேறு சவால்களும் திருப்பங்களும், நமது மீள் தன்மையையும் நேர்மையையும் சோதிக்கின்றன. ஆனால் நாம் அனைவரும் ஒன்றாக நின்று, நாம் விரும்பும் கட்சியைப் பாதுகாக்க வேண்டிய கடமை மிக்க நேரம் இது என்று அவர் கூறுயுள்ளார்.
ஜபாங் தலைவர்களாக இருக்கும், நாம் அடிமட்டத் தலைவர்கள் மட்டுமல்ல - நாம் வலிமையின் தூண்கள். மற்றும் மக்கள் தலைமையின் மீதான நம்பிக்கைக்கு இடையே உள்ள ஒரு பாலமாக உள்ளோம். நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். கட்சியின் பின்னால் உறுதியாக நிற்க வேண்டும். மிகவும் நியாயமான, சமமான மற்றும் போட்டித் தன்மை வாய்ந்த கட்சித் தலைவர் பிரதமர் அன்வாரின் தொலை நோக்குப் பார்வையையும், நோக்கத்தையும் நாம் துணிச்சலாக ஆதரிக்க வேண்டும்.
எப்போதையும் விட இப்போது, நம் பலத்தையும் இதயங்களையும் ஒன்றிணைக்க வேண்டும். இது பிளவுபட வேண்டிய நேரம் அல்ல. என்ன நடந்தாலும், மன்னித்து, - மறந்து – முன்னேற வேண்டும் என்ற ஒரு பொதுவான தீர்மானத்தை நாம் விதைக்க வேண்டும்.
வடக்கிலிருந்து தெற்கு, கிழக்கு முதல் மேற்கு வரையிலுள்ள அனைத்து ஜபாங் தலைவர்களின் பலத்தையும் ஒன்றிணைத்து, ஒற்றுமையாக முன்னேறுவதற்கும், நமது நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கும், மக்களுக்கும், கட்சியின் எதிர்காலத்திற்கும் போராட்ட உணர்வை மீண்டும் ஒரு போராட்டமான பயணத்தை மேற்கொள்ள வேண்டும். காரணம், நாம் அனைவரும் ஜபாங் தலைவர்கள் - நாமெல்லாம் கட்சியின் கோட்டையின் காவலர்கள் - நாம் மாற்றத்தை கொண்டு வருகின்றவர்கள்.
நன்றி.
குணராஜ் ஜார்ஜ் ஜாபாங்
கோத்தா ராஜா, தேசிய மத்திய உறுப்பினர்.