மகாதீரின் “மலாய் குடை” முயற்சிக்கு பெர்சத்துவின் ஆதரவை மாசாங் எம்பி வலியுறுத்துகிறார்
Machang MP Wan Ahmad Fayhsal defends Bersatu's support for Dr Mahathir Mohamad's "Malay Umbrella" initiative

Dated: 10.6.2025 Time: 11.05 am By: Punithai Chandran
பெட்டாலிங் ஜெயா,
மலாய்க்காரர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் முயற்சிக்கு ஆதரவளிப்பது, மலாய்க்காரர்கள் மற்றும் பிற இனங்களுக்கு இடையிலான ஒரு நீண்டகால ஒற்றுமையை உருவாக்கும் என்று பெர்சத்து உச்சமன்ற உறுப்பினரும், மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினருமான வான் அகமட் ஃபைஹ்சல் வான் அகமட் காமால் கூறியுள்ளார்.
மலாய்க்காரர்கள், கல்விமான்கள், ஆசிரியர்கள், கிராமப்புற ஆகியோரிடையே ஒருமிக்க கருத்தை உருவாக்கியப் பின்னரே, அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். பெர்சத்து கட்சியும், பாஸ் கட்சியும் மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெற்றிருந்தாலும், அது போதாது. ஒட்டுமொத்த மலாய் சமூகத்தின் ஒற்றுமையை மீட்டெடுக்க வேண்டும் என்றார்.
மலாய் குடை-க்கு பெர்சத்துவின் ஆதரவானது, உண்மையில் அவர்கள் தேசிய ஒற்றுமைக்காகத்தான் செயல்படுகிறார்களா என்பது குறித்த கேள்விகளை எழுப்பும் என்று யுனிவர்சிட்டி டெக்னோலோஜி மலேசியாவின் அரசியல் விமர்சகரான மஸ்லான் அலி வினவியுள்ளார்.
இது அரசியல்வாதிகள் வெவ்வேறு கூட்டங்ளில் முரணான கருத்துக்களைக் கூறி வருவதால், இரட்டை அரசியல் கருத்தில் அதாவது, political double speak கொண்டவர்களாக இருக்கின்றனர் என்பதையே காட்டுவதாக யுனிவர்சிட்டி சைன்ஸ் மலேசியாவைச் சேர்ந்த அகமட் பவுஸி அப்துல் ஹமிட் தெரிவித்துள்ளார்.
எது எவ்வாறாக இருந்தாலும், தற்போதைய அரசாங்கம் மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெற தவறிவிட்டது. எனவே, மலாய்க்காரர்கள் அரசு மீது நம்பிக்கைக் கொள்ளாதவரை, நாட்டில் அரசியல் நிலைத்தன்மை இருக்காது என்று வான் அகமட் ஃபைஹ்சல் தெரிவித்தார்.
எனவே, மலாய்க்காரர்கள் அரசு மீது நம்பிக்கைக் கொள்ளாதவரை, நாட்டில் அரசியல் நிலைத்தன்மை இருக்காது என்று வான் அகமட் ஃபைஹ்சல் தெரிவித்தார்.
நன்றி. எஃப்எம்டி