போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, ரயில் நிலையங்களுக்கு மேல் வீடுகளைக் கட்டும் திட்டம் குறித்து அரசு பரிசீலிக்கிறது
Exploring the government's proposal to build residential units above train stations as an innovative strategy to alleviate urban traffic congestion

Dated: 5.6.2025 Time: 12.05 pm By: Punithai Chandran
நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ரயில் நிலையங்களுக்கு மேல் வீடுகள் கட்டும் திட்டத்தை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார். இத்திட்டம் குறித்து கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) உடன் ஆய்வுச் செய்யப்பட்டு வருவதாகவும், இதற்கு பல ஒழுங்குமுறை மாற்றங்கள் தேவைப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
இதுபோன்ற ரயில் நிலையங்களுக்கு மேல் கட்டப்படும் பொது மற்றும் தனியார் குடியிருப்புகளில் ஒரு பகுதி பொதுமக்களுக்காக ஒதுக்கப்படும் என்றும் அண்மையில் நடைபெற்ற ஒரு கருத்தங்கில் அன்வார் தெரிவித்தார்.
இத்திட்டங்களை உருவாக்கினால், LRT மற்றும் MRT நிலையங்களுக்கு அருகிலேயே மலிவு விலையில் வீடுகளை வாங்குவதற்கு ஒரு முக்கிய கொள்கை மாற்றமாக இருக்குமென்றும், இதன்வழி கார்களின் பயன்பாடு கணிசமானக் குறையும் என்றும் போக்குவரத்து அமைச்சரான லோக் சியூ ஃபூக் கூறினார்.
எதிர்கால போக்குவரத்து முறைகள் குறித்து பேசும்பொழுது, ட்ரோன் இயக்கத்திற்கு இப்பொழுது சாத்தியம் இல்லை என்றும் லோக் கூறினார்.
நன்றி. எஃஎம்டி.