மியன்மார் விவகாரத்தில் ஆசியானின் ஈடுபாடு

Malaysian Prime Minister Anwar Ibrahim announced progress in ASEAN's engagement with Myanmar,

மியன்மார் விவகாரத்தில் ஆசியானின் ஈடுபாடு

Dated: 28.5.2025     Time: 4.30 pm      By: Punithai Chandran

மியன்மார் விவகாரத்தில் ஆசியானின் ஈடுபாடு முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், தற்போது இரு தரப்பினருக்கும் இடையிலுள்ள கட்டமைப்புக்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாகவும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 16-ஆவது ஆசியான் உச்சிநிலை மாநாட்டிற்கு பின்னர் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.  

அக்டோபர் மாதத்தில் வழக்கமாக விவாதிக்கப்பட வேண்டிய விசயங்கள் இப்போது நடந்துள்ளதாகக் கூறிய அவர், இது மியன்மார் விசயத்தில் ஒரு பெரிய மாற்றமாக இருக்கும் என்றார்.  

இதற்கிடையில் காசாவுக்கு எதிரான நீண்டகால போர்​ நிறுத்தம்,   மனிதாபிமான உதவிகளை வழங்குதல் மற்றும் ஐந்து அம்ச கருத்து போன்றவை பரந்த கட்டமைக்குள் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்..

நடைபெற்ற இந்த 46-ஆவது உச்சநிலை மாநாடு “உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மை“ என்ற கருப்பொருளில் நடைபெற்றது.

www.myvelicham.com