நெடுஞ்சாலை சுகுக் நிதி முறைகேடு: டான்ஸ்ரீயிடம் MACC வாக்குமூலம் பதிவு

The Malaysian Anti-Corruption Commission (MACC) recorded a six-hour statement from a "Tan Sri" yesterday (June 11) concerning the alleged misappropriation of Sukuk funds for highway construction in the Klang Valley.

நெடுஞ்சாலை சுகுக் நிதி முறைகேடு: டான்ஸ்ரீயிடம் MACC வாக்குமூலம் பதிவு

Dated: 12.6.2025  Time: 11.45 am  By: Punithai Chandran

கோலாலம்பூர்,

கிள்ளான் பள்ளத்தாக்கில் நெடுஞ்சாலை அமைப்பதற்காக சுகுக் (Sukuk) நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, "டான்ஸ்ரீ" பட்டம் கொண்ட ஒருவரிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) நேற்று புதன்கிழமை (ஜூன் 11) ஆறு மணி நேரம் வாக்குமூலத்தை பதிவு செய்தது. காலை 9 மணியளவில் தொடங்கிய வாக்குமூலம் பதிவு செய்யும் பணி மாலை 3.00 மணியளவில் முடிவடைந்ததாக டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.  

டான்ஸ்ரீ-யின் உடல்நிலையின் காரணமாக, கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள அவரது வீட்டிலேயே வாக்குமூலம் பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதுவரை, டான்ஸ்ரீ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உட்பட 52 சாட்சிகளிடம் MACC வாக்கு மூலங்களைப் பதிவு செய்துள்ளது. இதே செயல்முறை மேலும் ​தொடரும் என்றும்  அஸாம் தெரிவித்தார்.

இதற்கிடையில், மலாக்காவில் உள்ள டான் ஸ்ரீயின் இல்லத்தில் MACC சோதனை நடத்தியதாகவும், ஆனால் எதுவும் கைப்பற்றப்படவில்லை அல்லது பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, ஒரு நெடுஞ்சாலை சலுகையாளருக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் சுமார் 32 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கைப்பைகள், நகைகள், ஆடம்பர வாகனங்கள், கடிகாரங்கள், பணம் மற்றும் ஒரு ஆடம்பர குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களை MACC கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.

நன்றி. த ஸ்டார்