யூசோஃப் ராவ்தர் விடுதலையைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அட்டர்னி ஜெனரல் சேம்பர்ஸ் (AGC)

The Attorney-General's Chambers (AGC) has called on the public to avoid speculative and defamatory statements after the High Court

யூசோஃப் ராவ்தர் விடுதலையைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அட்டர்னி ஜெனரல் சேம்பர்ஸ் (AGC)

Dated: 13.6.2025   Time: 12.50 ​pm  By: Punithai Chandran

பெட்டாலிங் ஜெயா,

யூசோஃப் ராவுத்தர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கு பொதுமக்களின் கவனத்தை  ஈர்த்துள்ளதால், நீதிமன்றத்தால் கூறப்பட்ட காரணங்களுக்கு வெளியே, ஊக அல்லது அவதூறான கருத்துக்களைத் தவிர்க்குமாறு AGC பொது மக்களை வலியுறுத்தியுள்ளது.

நீதிமன்றத்தின் முடிவை மதிப்பதாகவும், நீதிபதியின் காரணங்களை ஒப்புக் கொள்வதாகவும் AGC தெரிவித்துள்ளது.  இந்தக் குற்றவியல் விசாரணை, வெளியாரின் செல்வாக்கு ஏதும் இல்லாமல், ஆதாரங்களை முழுமையாக மதிப்பாய்வு செய்து, சட்டக் கொள்கைகளின்படி இந்த வழக்கு நடத்தப்பட்டது என்று AGC கூறியது.

இத்தீர்ப்பினை AGC தற்போது விரிவாக ஆய்வு செய்து வருகிறது என்றும், மேலும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதற்கு முன்,  அனைத்து நிலைகளையும் அது தனது கருத்தில் கொண்டிருக்கும் என்றும் AGC தெரிவித்துள்ளது.  

ஒன்பது மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த யூசோஃப், நேற்று போதைப்பொருள் கடத்தல் மற்றும் இரண்டு போலி பிஸ்டல்களை வைத்திருந்த குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டார். இது தன்னை சிக்க வைக்க திட்டமிட்டு வைக்கப்பட்டன என்பது, அவரது தரப்பின் வாதமாக இருந்தது.

நன்றி. எஃப்எம்டி