சீர்திருத்தங்களுக்கு காலமும், அரசியல் ஆதரவும் தேவை
Prime Minister Anwar Ibrahim stated that implementing structural reforms will take time and require intellectual and political support.

Dated: 11.6.2025 Time: 11.05 am By: Punithai Chandran
கோலாலம்பூர்,
தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள சீர்திருத்த பாதுகாப்பான மாற்றங்களை விரைவில் கொண்டு வருவதற்கு சில காலம் வேண்டும் என்றும், இதனை அறிவார்ந்த மற்றும் அரசியல் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் நேற்று கூறியுள்ளார்.
சசானா கிஜாங்கில் உள்ள இஸ்லாமி பொருளாதாரத்தின் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுப்பிடிக்களுக்கான மையத்தை (Centre of Excellence for Research and Innovation in Islamic Economies) தொடக்கி வைத்தபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த பெரிய சீர்திருத்தத்தை ஒரே ஆண்டில், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் செய்து முடிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் இப்போதுள்ள அரசாங்கம் பின்னோக்கிச் செல்வதற்கு நோக்கம் கொண்டிருக்வில்லை என்றும், முன்னோக்கிச் செல்லவே அரசாங்கம் விரும்புகிறது என்று அன்வார் தெரிவித்தார்.
விரைவான முடிவுகளை எடுக்கும்படி விமர்சகர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால் கூட்டணி அரங்சாங்கத்திற்கு சில வரம்புகள் உள்ளன. பிகேஆர் கட்சியில் 36 நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் உள்ளனர். பக்கத்தான் ஹரப்பான் கட்சியில் 82 நாடாளுமனற் உறுப்பினர்கள் உள்ளனர். இவற்றினைத் தவிர PH, அம்னோ மற்றும் தேசிய முன்னணி ஆகியவற்றின் கட்சிகளும் அரசாங்கத்தில் கூட்டணியாக இருப்பது நமது நல்வாய்ப்பு ஆகும். அதற்கென்று பேச்சுவார்த்தை, விவாதம் எல்லாம் உள்ளன. எதனையும் நிரந்தரமாக எடுத்துக் கொள்ள முடியாது. தேசியத் திட்டங்களை அமலாக்கப்பட வேண்டுமென்றால், சபா மற்றும் சரவாக் கூட்டணிகளின் ஆதரவும் முக்கியம் அவர்வான் இப்ராஹிம் கூறினார்.
முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடன், பிகேஆர் 2022 நவம்பரில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, structural economic reforms-இல் 50% விழுக்காடு மதிப்பீட்டை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்வார் இப்ராஹிம் இவ்வாறு கூறியதற்கு சில தினங்களுக்கு முன், முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின், 2022 நவம்பரில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து Structural Economic Reforms-ல் அரசுக்கு 50% மதிப்பீட்டை வழங்கியிருந்தார். மேலும் வரி அடிப்படையை விரிவுப்படுத்துவது, தாராளச் சலுகைகளை மறுசீரமைப்பது மற்றும் ஒய்வூதிய சீர்திருத்தங்களை முறைப்படுத்துவது ஆகிய மூன்று முக்கிய துறைகளில் முன்னேற்றம் காணப்படவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
தனது தவணைக் காலம் முடியும்போது, அரசாங்கம் முக்கிய நிறுவனங்களின் சீர்திருத்தங்களை நிறைவேற்றப்படாமல் கூட போகலாம் என்று சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வொங் சென்னும் தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.