இந்தியர் சமூகநல மன்றம், கோத்தா திங்கி, ஜோகூர்
Indian Social Welfare Board, Kota Tingi johor

24 June 2025 Time:1.00pm News By:Ganapathy Krishnasamy
ஜோகூர் கோத்தா திங்கியில் இயங்கி வரும், இந்திய சமூகநல மன்றம் அங்குள்ள இந்தியச் சமுதாயத்திற்காக பல நல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த இயக்கம் தொடங்கப்பட்டு 12 ஆண்டுகள் ஆகின்றன.
இதுவரையில், இந்த இயக்கம் சமூகத்திற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, ஆண்டுதோறும், தீபாவளி பண்டிகை சமயத்தில் 20, 30 குடும்பங்களுக்கு வசதி குறைந்தோருக்கு பொருட்கள் கொடுத்து உதவி வருகிறது.
அன்னையர் தினத்திற்கென நிகழ்ச்சி நடத்தி, அதில் சிறந்த 20 தாய்மார்களுக்கு சேலைகள், பரிசுப் பொருட்களைக் கொடுத்து, அன்னையர்களைப் பெருமைப் படுத்தி வருகிறது.
அதேபோன்று சிரமப்படும் குடும்ங்களை அடையாளங் கண்டு, அவர்களுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி கொடுப்பதுடன், அவசியமானோருக்கு ரொக்கப் பணமும் கொடுத்து, அவர்களுக்கு உதவி வருகிறது.
மேலும், இடம் கிடைக்கப் பெறாத பள்ளிப் பிள்ளைகளுக்கு இடம் வாங்கிக் கொடுத்து வருவதுடன், அவர்களுக்கான பல சேவைகளையும் செய்து வருகிறது.
இந்த இயக்கத்தின் பொறுப்பாளர்களாள் வருமாறு:
தலைவர் டாக்டர் வி. இராஜகோபாலன்
துணைத் தலைவர் Ms. பரமேஸ்வரி
உதவித் தலைவர் திரு. முருகையா
செயலாளர் Ms. ஏ.எஸ். சுகுணா த/பெ அர்ஜூனன்
பொருளார்கள் திரு. முத்துசெல்வன்
Ms. கங்காதேவி மகளிர் பகுதி தலைவி Ms. சுபாஷிணி,
துணைத் தலைவி Ms. அன்பரசி
இயக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக Ms. சரோஜா, Ms. சரோஜா, Ms. சரஸ்வதி, விக்கி, Ms. தர்ஷிணி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த இயக்கம், மலேசியாவில் அதிகமானோர் வேலையில்லாத சூழ்நிலையில் உள்ளனர் என்றும், குறிப்பாக, பாதுகாவலர் அதாவது செக்குரிட்டி வேலைகளுக்கு மலேசியர்களுக்கு வேலை கொடுப்பதை விடுத்து, வெளிநாட்டினருக்கு குறிப்பாக நேப்பால், மற்றும் பங்களாதேஷ் நாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு தருவது மிகவும் கவலைக்குரியதாக உள்ளது என்று கவலை தெரிவித்தது. .
மேலும், இயக்கத்தின் மற்றுமொரு நடவடிக்கையாக ஒரு பிரேத வாகனம் ஒன்றினை வாங்க வேண்டும் என்று நிர்வாகக் குழு நோக்கம் கொண்டுள்ளது. இதற்கான அடுத்தக் கட்ட நடவடிக்கைகளும் படிப்படியாக மேற்கொண்டு வருவதாக இயக்கத்தின் தலைவர் டாக்டர் வி. இராஜகோபாலன் தெரிவித்தார்.
www.myvelicham.com advt 018-2861950