கோல்ட்பில்ஸ் தோட்ட தமிழ் பள்ளி விவகாரம் விரைவில் தீர்வு காண்பேன் மந்திரி புசார்

Goldfields Estate Tamil School issue will be resolved soon Minister Besar

கோல்ட்பில்ஸ் தோட்ட தமிழ் பள்ளி விவகாரம்  விரைவில் தீர்வு காண்பேன்   மந்திரி புசார்

03 Agust 2023

  கோல்ட்பில்ஸ் தோட்ட தமிழ்ப்பள்ளி விவகாரம் குறித்து தீர்வு காண பள்ளி எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன் என்று மந்திரி புசார் அமிருடின் சாரி அறிவித்தார்.

பள்ளியின் மின்சாரக் கட்டணம் வாணிப கட்டணமாக இருக்கிறது. அதனால் மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு உடனடியாக தீர்வு காண்பேன். பள்ளியில் திடல் பிரச்சனையாக உள்ளது. இந்த திடல் பிரச்னைக்கும் முறையாக தீர்வு காண்பேன்.

அடுத்து பள்ளியில் தற்போது மாணவர்கள் அதிகரிக்க தொடங்கி விட்டனர். தற்போது 170 மாணவர்கள் படிக்கின்றனர். இதனால் இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.

அருகில் துவான் மீ தோட்ட தமிழ் பள்ளியும் உள்ளது. பண விரயம் இல்லாதவாறு முறையாக தீர்வு காணப்படும்.  சிலாங்கூரில் உள்ள 98 தமிழ் பள்ளிகளுக்க வருடந்தோறும் சிலாங்கூர் மாநில அரசு நிதியுதவி செய்து வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.